சந்திக்கின்றனர் இந்திய – அமெரிக்க அமைச்சர்கள்!


இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உக்ரைன் விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பில், பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் வினவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், அது தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பாவை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மாதமொன்றில் கொள்வனவு செய்யும் எரிபொருளை தொகையை, ஐரோப்பா ஒரு மாலை நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை அமெரிக்க புறக்கணித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு பீப்பாய் ஒன்றை 35 டொலர் என்ற குறைந்த விலையில் வழங்க ரஷ்யா இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.