இனிப்புகளோடு ஒரு அன்னை!!


 அரசாங்கத்தை பதவி விகக கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் காலி முகத்துடலில் மக்கள் கூடாரங்கள் அமைத்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அன்னை ஒருவர் கையில் இனிபோடு போராட்ட களத்தில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 இது குறித்து முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிடுகையில்,

இந்த படத்தை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? சிறு குழந்தைகளுக்கு தாய்மார் இனிப்பு கொடுக்க காத்திருந்த காட்சி நினைவுக்கு வராமல் இருந்தால் , அவர்கள் தாயில்லா பிள்ளைகள். போராட்ட களத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த இனிப்புகளோடு ஒரு அன்னை.

உங்களை போன்ற அன்னையர் இருக்கும் போது , இந்த குழந்தைகளது போராட்டங்கள் தோற்காது. இது அனைத்து மக்களுக்கான போராட்டம். இது வெல்லாது போனால் இனி எந்த விடிவும் கிடைக்காது என பதிவிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.