அலிக்ஸ் எஸ்பர்காரோ சம்பியன்!


அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.

அந்த வகையில் ஆண்டின் மூன்றாவது சுற்றான அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ், டெர்மாஸ் டி ரியோ ஹோண்டோ சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 120.2 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 20 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 36.198 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, டுகார்டி அணியின் ஜோர்ஜ் மார்டின், 0.807 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, சூசுக்கி அணியின் அலெக்ஸ் ரின்ஸ், 1.330 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு வெற்றியுடன் 45 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

கே.டி.எம். அணியின் பிரட் பைண்டர் 38 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி ஒரு வெற்றியுடன் 36 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நான்காவது சுற்றான அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 11ஆம் திகதி அமெரிக்கா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.