மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த புத்தாண்டு பரிசு இதுவே!


புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகும்.

இன்று ( வியாழக்கிழமை ) நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார் .

இலங்கையினுடைய பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்கட்சிகள் கூறிய விடயங்களை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டமையே என்றும் தெரிவித்தார் .

மேலும் மீள் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்துவதை நிறுத்தி சம்மந்தப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் இந்த எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளாத அரசாங்கமும், அதிகாரிகளும் செயல்பட்டதன் காரணமாக அதன் விளைவை இன்று மக்கள் எதிர்நோக்கியிருக்கார்கள்.

அளவுக்கு அதிகமாக பணம் அச்சிடப்பட்டதால் இன்று எங்களுடைய ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகின்றது. எனவே இன்றைய மோசமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சுதநிதிரமாகவும் சுயாதீமாகவும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை எதிர்வரும் காலத்தில் இந்த நாட்டில் பிரதமராக வரக்கூடியவர் மதத்தை முன்நிலைப்படுத்தாது மக்களை முன்நிலைப்படுத்தி செயல்படுகின்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார் .

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.