வாழைச்சேனையில் இரண்டு பெண்கள் கைது!

 


மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இரு பெண்களை நேற்று (22) கைது செய்துள்ளதுடன் 23 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.


பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒனறிணையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் பிறைந்துறைச்சேனையில் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண் ஒருவரை 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டபோது ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

- நிருபர் சரவணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.