மைத்திரியுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு!!

 


நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு தொடர்பில் தெரிவித்துள்ள ஜூலி ஷங் , 'தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை கேட்டறிவதற்கும் , அமைதியான போராட்டத்திற்கான உரிமை உட்பட ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கும் நான் அவரைச் சந்தித்தேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனான சந்திப்பு தொடர்பில் தெரிவித்துள்ள அவர் , 'அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பான அவரது யோசனைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு , நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இலங்கை பெண் தலைவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை ஆதரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனான சந்திப்பில் தெரிவித்தேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.