இன்று மாபெரும் போராட்டம்!!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு  மக்கள் போராட்டம் ஆங்காங்கே வெடித்து வரும் நிலையில் இன்று,

கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் மாபெரும் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 


போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இதுபற்றி பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​"போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது" எனவும் " ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், பலாத்காரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவோம்" எனவும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.