காணாமல் போயிருந்த மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு


 நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதி ஒருவரினது சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிவுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 48 ஊழியர்கள் பேருந்து ஒன்றில், நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு விட்டு நேற்று முன்தினம் (12) வவுனியாவுக்கு திரும்பும் வழியில் இறம்பொடை நீர்வீழ்ச்சியை பார்வையிட்டபோது, அவர்களில் 7 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனா். அவர்களில் நால்வரை அங்கிருந்த சிலர் காப்பாற்றி கரைசேர்த்துள்ள நிலையில் மூவா் காணாமல் போயிருந்தனா்.

இந்நிலையில், காணாமல்போயிருந்த மூவரில் யுவதியொருவரின் சடலம், கற்பாறையொன்றில் சிக்கியிருந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த  பொன்னுத்துரை மதுசாலினி (21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனா்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.