ரம்புக்கனை சம்பவம் - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை!!

 


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  றம்புக்கனை சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார். 


அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ட்விட்டர் செய்தியில், றம்புக்கனை சம்பவத்தின் முடிவு மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விதமான வன்முறைகளையும் அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு கோரியுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.