உயர்கிறது மரக்கறிகளின் விலை!!

 


மேலதிக கையிருப்பு வருவதைத் தொடர்ந்து சந்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் மரக்ககறிகளின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


நாடு முழுவதிலும் உள்ள பொருளாதார மையங்களில், குறிப்பாக தம்புள்ளையில் அண்மைய நாட்களில் மரக்கறிகளின் விலைகள் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறைந்தளவான வர்த்தகர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வந்திருந்தனர்.


எனினும், தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மரக்கறிகள் சந்தைக்கு வந்துள்ள நிலையில் இன்று சந்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.


பூசணி, கோவா, வெள்ளரிக்காய் தவிர ஏனைய மரக்ககறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.


புத்தாண்டுக் காலத்தை இலக்காகக் கொண்டு விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதால் தற்போது மரக்கறிகள் அதிகளவில் பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.