ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி!

 


தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் கூறினார்.

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் மூன்று மாதங்களில் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்று ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது.எமக்கு தற்போது டொலரும் இல்லை. ரூபாவும் இல்லை.

தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது குறித்து ஸ்கைநியூஸ் ஊடகவியலாளர் இதன்போது சுட்டிக்காட்டிய போது, இளைஞ்கள் தமது எதிர்காலம் பறிக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.இதேபோன்று வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்னர். நடுத்தர வகுப்பினர் தமது வாழ்க்கை நிலை சீர்குழைந்திருப்பதாக காணுகின்றனர். விவசாயத்துக்கான போதிய உரம் இல்லாமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாம் எதிர்கொண்டுள்ள சுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமையினாலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

உக்ரேன் போர் இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? இது குறுகிய காலத்திற்குள் மோசமான நிலையை அடையுமா? என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உண்மையிலேயே நாம் ஸ்திரமான நிலையில் இல்லை விவசாயத்துக்கான போதிய உரம் இல்லை இதனால் எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் காணப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நாம் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது என்பதில் கவனம் செலுத் வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தற்போதைய நிலையில் உதவி வழங்க முன்வரும் நாடுகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? என்ற கேள்விக்கு பிரதமர் ரணில்விக்கிமசிங்க பதில் அளிக்கையில் " நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு பணமில்லை. இது குறித்து வெட்கப்படவேண்டும்.இதுதான் யதார்த்தம் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இதற்கு சில காலம் செல்லும்" என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.