பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!


கொழும்பு – கடவத்தை (138) வீதியில் இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாக கடவத்தையில் இருந்து ஆரம்பிக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.