டெல்லியை வென்றது சென்னை!


ஐ.பி.எல். ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே 87 ஓட்டங்களையும் ருத்துராஜ் கெய்க்வாட் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், நோட்ஜே 3 விக்கெட்டுகளையும் காலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 25 ஓட்டங்களையும் சர்துல் தாகூர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி 3 விக்கெட்டுகளையும் முக்கேஷ் சௌத்ரி, சிம்மர்ஜிட் சிங், டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டெவோன் கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.