எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை!

 


சந்தைக்கு இன்றைய தினம் மேலும் 80 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்று 45 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் தினமும் தலா 80 ஆயிரம் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளாந்தம் 60 சதவீதமான எரிவாயு கொள்கலன்களை கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு விநியோகிக்குமாறு கோப் குழுவினால் லிட்ரோ நிறுவனத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மக்கள் அதிகம் உள்ளதனால் இவ்வாறு நாளாந்தம் 60 சதவீதமான எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.