மகனுடன் கடற்றொழிலுக்குச் சென்ற தந்தை பலி!


யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இருந்து மகனுடன் கடற்தொழிலுக்கு சென்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை, உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் தனது மகனுடன் தொழிலுக்கு சென்ற வேளை கடலில் தவறி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். இந் நிலையில் மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்றைய தினம்  நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.