தேர்தலை பிற்போடமுடியாது - தினேஷ் குணவர்தன!


அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.