பல இடங்களில் எரிபொருளுக்காக போராட்டம்!


எரிபொருளை கோரி ஜா-எல – நீர்கொழும்பு வீதியை மறித்து பிரதேசவாசிகள் சிலர் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை ஹிக்கடுவையில் இருந்து காலி வீதியை மறித்தும், வஸ்கடுவவில் இருந்து காலி வீதியை மறித்தும் போராட்டங்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

மேலும், காலி – மாத்தறை வீதியை மறித்து தெவத்த சந்தியிலும் பொரளை சந்தியை முழுமையாக மறுத்தும் எரிவாயுவை வழங்க கோரி போராட்டம் இடம்பெறுகின்றது.

இதேவேளை, இன்று காலை முதல் கொழும்பு உட்பட பல பகுதிகளில் எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.