எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் எம்.பி!


நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாவலில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் சமூக வலைதளத்தில் நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை பிற முன்னுரிமை வழிகள் மூலம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், ஹர்ஷ டி சில்வா தனது வாகனத்திற்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகின்றார்.

நாவல வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் 95 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், 50 வாகனங்கள் மாத்திரம் வரிசையில் நிற்பதால் நிரப்ப விரும்புவோர் அங்கு வருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/RyMb54ml_PI

நீண்ட கால அடிப்படையில் எரிபொருள் மற்றும் உரங்களைப் பெறுவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் எவ்வாறு பெறப் போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அந்தக் குறுகிய காணொளியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும் "எனக்குத் தெரியாது, நான் இப்போது மிகவும் சோர்வாக இருக்கிறேன். ஆனால் முயற்சி செய்வோம், எங்களுக்கு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை, ”என்று ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.