எதிர்க்கட்சி ரணிலுக்கு ஆதரிக்காது – ரஞ்சித் மத்தும பண்டார!


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆதரவையும் வழங்காது என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு  இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளது.

இந்நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை கட்சி முன்மொழியும் என தெரிவித்தார்.

அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆதரவையும் வழங்காது எனவும் அவர் தெரிவித்தார்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.