இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!


ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுகளை பெறுபவர்கள் முன் பதிவு செய்துகொண்டு திணைக்களத்திற்கு வருகை தருமாறு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பலர் முன் பதிவு இன்றி வருகை தருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் முன்பதிவு செய்த நபர்களுக்கு மாத்திரமே சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.