இலங்கை மக்களுக்கு விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!





எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதோடு, நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிரதமர் மேலும் கூறுகையில்,

உலகத்தில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகி வருவதாக அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜனட் எலன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகின் பல நாடுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் அதில் இலங்கையும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

அதன்படி நாட்டின் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே, உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, ஜூன் நடுப்பகுதி வரை நாட்டுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த இதர அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் கூறினார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.