சஜித் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு!!
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவசரகால நிலைமைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த அவசரகாலச் சட்டத்தினால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை தன்னிச்சையாக கைது செய்து காவலில் வைக்க காவல்துறைக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
“எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டு மக்களை பயம் மற்றும் வன்முறையைத் தவிர வேறெதுவும் இல்லாமல் அடக்க மாட்டீர்கள். என கோட்டாபய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த அவசரக்கால சட்டத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் நாட்டில் எந்த தீர்வும் கிடைக்கபோவதில்லை எனவும் சஜித் பிரேசதாச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை