‘முள்ளிவாய்க்கால் கஞ்சி‘ மட்டக்களப்பில் ஆரம்ப நாள் நினைவேந்தல்!

 


முள்ளிவாய்க்கால் கஞ்சி ‘ எனும் கருப்பொருளில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.


2009 ஆண்டு இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கு மாகாண உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வாக கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்து கதை பகிர்வோம் முள்ளிவாய்க்கால் வாரம் உணர்வுபூர்வமாக இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்ற ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி ‘ ஆரம்ப நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் . சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் . மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர் .


முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கஞ்சிப்பானை வைக்கப்பட்டு சிரட்டைகளினால் கஞ்சி பகிரப்பட்தத்துடன் நிகழ்வின் நினைவு துண்டு பிரசுரமும் பகிரப்பட்டன .

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.