தேசிய மின்தொகுப்பில் இணைக்கும் பணி ஆரம்பம்!


நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தற்போது செயலிழந்துள்ள மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்தொகுப்பில் இணைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, மொத்த கொள்ளளவான 270 மெகாவோட் நாளை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 20 நாட்களாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்தொகுப்பில் இணைப்பதன் மூலம் தற்போதுள்ள மின்வெட்டை ஓரளவுக்கு குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.