தங்கத்தேர் பற்றி வெளியான தகவல்!!

 


அசானி புயலின் தாக்கத்தால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடற்கரைக்கு, கடலில் இருந்து அடித்து வரப்பட்ட விசித்திர தேர், மியான்மரில் இருந்து வந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.


  இத்தேரினைக் கண்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தேர் தங்கத்தில் செய்யப்பட்டது என கருத்து தெரிவித்திருந்தனர். இத்தேர் குறித்து ஆய்வு செய்த கடலோர காவல்படையினர், அத்தேரில் எழுதப்பட்டிருந்ததை மொழிப்பெயர்ப்பு செய்தபோது, சீன-திபெத்திய மொழியான பர்மிய மொழி என கண்டறியப்பட்டது.


அதில், 1383 ஆம் ஆண்டு, முதல் முழு நிலவு நாளின், 15 வது நாள் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அது தங்க வர்ணம் பூசப்பட்ட தேர் என்றும், அதன் அமைப்பு மரத்தால் ஆனது என்றும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.