இயக்குநர் ஷங்கருக்கு மகள்களால் ஏற்பட்ட நிலை!!

 


தமிழ் சினிமா முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர்.பிரமாண்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது ஆதிகத்தை செலுத்தி வந்தார்.


இவர் அண்மை காலமாகவே பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.


தனது மூத்த மகள் திருமணத்திலே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டார். பல கோடிகளை செலவழித்து நடைபெற இருந்த திருமணம் நின்றது.


அந்த சங்கடமான சம்பவத்தில் இருந்து மீளாமல் இருந்து வரும் ஷங்கருக்கு தனது இளைய மகள் அதிதியால் புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது.


இளைய மகள் அதிதிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசை. தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தனது அப்பா ஷங்கரிடம் கூறியுள்ளார்.


அதற்கு அவர் ஒரு படத்தில் மட்டும் நடித்துக்கொள் என்று தெரிவித்துள்ளார். எம் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடித்து முடித்துள்ளார் அதிதி.


இந்த படத்தைத் தொடர்ந்து இன்னும் 4 படங்களில் கமிட்டாகி உள்ளாராம் அதிதி. ஒரு படத்தில் நடிக்க அனுமதி கொடுத்த ஷங்கருக்கு மகளின் செயல் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் அவர் மகள்களால் நிம்மதி இழந்துள்ளதாக கூறப்படுகிறது.



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.