காரைநகரில் கடற்படை காணி சுவீகரிப்பு தடுத்துநிறுத்தம்!
காரைநகர் மடத்துவெளியில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 11 ஏக்கர் காணியைச் சுவீகரிக்கும் நோக்கில் நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் தடுத்துநிறுத்தப்பட்டது .
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு தொ
டர்ந்து நிலவும் போது கூட தமிழர்களின் காணிகள், கோவில்கள், தொல்பொருட்கள் என்பன இராணுவ முகாம் அமைப்பதற்காகவும், விகாரை கட்டுவதற்காகவும், சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழர் தாயகத்தை பௌத்த சிங்கள மயப்படுத்தும் நோக்கில் பௌத்த சிங்கள பயங்கரவாத அரசுகளினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை