நள்ளிரவில் கொழும்பில் பதற்றம்!!

 


கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரண்டாம் கட்ட போராட்டம் இன்று ஆரம்பிக்கவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.