சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை!


வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓமானில் உள்ள விநியோகஸ்தர் தாய்லாந்தின் விநியோகஸ்தரை விட சற்றே அதிக விலை கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் 03 முதல் 04 மாதங்களுக்கு எரிவாயுவை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய எரிவாயு தேவையை கருத்திற்கொண்டு ஓமானில் உள்ள விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதலில் தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.