இலங்கையர்கள் மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!


இலங்கையிலிருந்து மேலும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகுமூலம் பயணித்த அவர்கள், தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் திடல் பகுதியை இன்று காலை சென்றடைந்ததாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மற்றும் திருகோணமலையில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும், 4 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை பொறுப்பிலெடுத்த தமிழக கரையோர காவல்துறையினர், விசாரணைக்காக மண்டபம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விசாரணை முடிந்த பின்னர், மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.