பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றச்சாட்டு!!


பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தமை பிறிதொரு அரசியல் நாடகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துகளுக்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

அத்தோடு சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க பேச்சுக்கள் இடம்பெற்ற வேளையில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி நிமித்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற காரணத்திற்காக கட்சி அடிப்படையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருசில விடயங்களுக்கு ஆதரவு வழங்கியதாகவும் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.

இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்கமைய செயற்படுகிறார் என திஸ்ஸ விதாரன குற்றம் சாட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.