யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!


யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் ஜீலை - 1ம் திகதி தொடக்கம் குடும்ப பங்கீட்டு அட்டைக்கு எாபொருள் விநியோகம் இடம்பெறவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் மட்டும் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஆராயப்பட்டது. குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி,

மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படும். நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேரடியாக சேகரிக்கப்படும்.

இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார். பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த CEYPETCO நடவடிக்கை எடுக்கும்.

 பங்கீட்டு அட்டை முறை ,  ஜூலை 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும்வகையில் பொறிமுறை உருவாக்கப்படும்.

சுகாதார சேவையினருக்கான எரிபொருள் விநியோகத்துக்கு தனியான ஏற்பாடுகள் செய்யப்படும். அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து பதிவு செய்யும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்களிடம் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு பிரதேச செயலக எல்லைகளுக்குள் அமைந்துள்ள ப.நோ.கூ.ச MPCS நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை வழங்கும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பிரதேச செயலர்கள் மற்றும் வடக்கு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் மற்றும் பெற்றோர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.