லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை!


நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படவுள்ளது.

குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை.

அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.