மஹிந்தவுக்கு அழைப்பு!


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “எனது நண்பரும் இலங்கைத் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறும் டெல்லியில் பொதுக் கூட்டத்தில் பேசவும், இந்து மற்றும் புத்த கோயில்களுக்குச் செல்லவும் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளேன்.

அவர் பருவமழைக்கு முன்னர் ஜூன் மாதத்தில் நாட்டுக்கு வருவார் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.