இலங்கையின் இளம் வீரரின் ட்விட்டர் பதிவு!!

 


அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

எனினும், போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தது. போட்டித் தொடரில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதற்கமைய, போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை வெல்லாலகே பெற்றுள்ளார்.

இந்நிலையில், வெற்றி குறித்து துனித் வெல்லாலகே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். அதில், ´வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்´ என துனித் வெல்லாலகே பதிவிட்டுள்ளார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.