இலங்கையில் மந்தபோசணை அதிகரிப்பு - யுனிசெப்!!

 


இலங்கை தொடர்பில் யுனிசெப் அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் அமைப்பு எச்சரித்துள்ளது. 

யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனைத் தெரிவித்துள்ளார்.  

யுனிசெவ் அமைப்பின் மதிப்பீட்டின் படி தாங்கள் உரையாடிய பத்து குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் உணவைக் குறைத்துள்ளதாகத்  தெரிவித்துள்ள அவர்,  மூன்றுநேரம் உணவுண்டவர்கள் தற்போது இரண்டு அல்லது ஒருநேரம் உணவு உண்கின்றனர். மேலும் அவர்களின் உணவின் தரமும் குறைவடைந்திருக்கவேண்டும் எனவும்  கூறியுள்ளார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாகப் பாதிக்கப்படலாம் எனவும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் அச்சம் வெளியிட்டுள்ளார்.

உலகில் சிறுவர்கள் மந்தபோசனையால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை ஏழாவது இடத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.