நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்!!


 இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியுள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஈ.சி.ஆரில் உள்ள Sheraton Grand விடுதியில் நடைபெறுகிறது.

இவர்களின் திருமணத்திற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அழைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இடம்பெற்ற விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் வந்தவர்களுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு போத்தலிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வெவ்வேறு புகைப்படங்கள் ஒட்டபட்டிருந்ததாக கூறப்படுகின்ற நிலையில் அவை சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது .

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.