காரைநகரில் கடற்ப்படை காணியை அபகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்!📸
காரைநகர் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட J/45 நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையினரது தளத்துக்கென அளவீடு செய்து அபகரிக்கும் முயற்சி பொதுஅமைப்புக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களினால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திரு.செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாவட்ட துணைச் செயலாளர் ராஜஸ்ரீகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை