மனைவியை கொலை செய்த கணவன் பிள்ளைக்கு செய்த கொடூரம்


 தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது.


இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸர், சந்தேகநபர் தனது 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த 13 வயது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காயமடைந்த தந்தையும் பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.