திருவிழாவுக்கு நின்றவர்கள் மீது டிப்பர் மோதியது!!


 யாழில் உள்ள கோவில் திருவிழாவுக்காக கூடியிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்னர்.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ளது.

மணல் கடத்தல் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தில் பொலிஸார் வழிமறித்த டிப்பர் வாகனம் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி வழியாக தப்பி ஓடியுள்ளது.

இதன்போது பொலிஸார் துரத்திச் சென்றிருந்த நிலையில் நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கோவிலில் சப்பற திருவிழாவுக்கு கூடியிருந்த மக்கள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.

சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.