மருத்துவரின் வாகனத்தில் பெற்றோல் திருட்டு!!

 


கண்டி தேசிய வைத்தியசாலை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து எரிபொருளைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடியால் வைத்தியர் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு கடமைக்கு சென்று வருகின்றார். இந்நிலையில் அன்றும் வழமை போல 28ஆம் இலக்க வார்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வைத்தியசாலைக்குள் சென்றுள்ளார்.

இதன்போது , சந்தேகநபர் போத்தல் ஒன்றில் மோட்டார் சைக்கிளிலிருந்த எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த போது, வைத்தியசாலை காவலர்களிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான எரிபொருள் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.