உணர்ச்சிவசப்பட்ட ஜனாதிபதி ரணில்!!

 


இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றியிருந்தார்.

இதன்போது சபாநாயகர் அவர்களே, நானும் நீங்களும் 1973 ஆம் ஆண்டு எமது அரசியல் பயணத்தை ஒன்றாக ஆரம்பித்தோம், எனக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் என உணர்ச்சிவசப்பட்டார்.

இந்நிலையில் நீங்கள் பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி என்றும் நான் 45 வருடங்கள் இந்த நாடாளுமன்றத்தோடு பயணித்துள்ளேன் எனவும் ஜ்னாதிபதி தெரிவித்தார்.

அதோடு எனது வாழ்க்கை இந்த நாடாளுமன்றம் தான் இருக்கின்றது. அதனால் இந்த நாடாளுமன்றம் ஊடாக எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்துள்ளமை தன்னகு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.