சர்வகட்சி அரசிற்கு ஆதரவு வழங்குவோம் - சம்பந்தன்!!

 


சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசு அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அனுப்பிய கடிதம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

“சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்றுமுன்தினம் தான் அவரின் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துக்கு நான் இன்னமும் பதில் அளிக்கவில்லை.

சர்வ கட்சி அரசாங்கம் என்பது மக்களின் பிரச்சினையைத் தீர்க்க மிக நல்ல விடயம் எனவும் அதற்கான முழு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.