அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு!!

 




ராஜபக்சவின் பதவி விலகலை நேற்று (15) உத்தியோக பூர்வமாக சபா நாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்த நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சிங்கும் அது தொடர்பில் அறிவுப்பு வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் கணக்கில் அறிவுப்பு ஒன்றை விடுத்த அவர் ஜனதிபதி கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் இலங்கை பிரஜைகள் இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுகிறார்.

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தீர்க்க நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் ஜூலி சங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.