இலங்கைக்கு இன்று மிகவும் தீர்க்கமான நாள்!!

 


இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி பதவிக்காக , பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்காக இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும். அதேவேளை வாக்கு சீட்டை எம்.பிக்கள் படமெடுத்தால் அவர்களுக்கு ஏழாண்டுகள்வரை நாடாளுமன்றம்வர தடை விதிக்கப்படலாம்.

இந்நிலையில் வேட்பாளர்களில் டலஸ் அழகப்பெருமவுக்கான ஆதரவு வலுத்துள்ளதுடன் 10 இற்கும் மேற்பட்ட கட்சிகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.