நாளை சமுர்த்தி பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு!!

 


தமக்கான எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறு கோரி  தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை அந்தச் சங்கம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களின் கீழுள்ள அரச ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கலின் போது சில பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் ஈடுபட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோக ஒழுங்குபடுத்தல் பணிகளில் பிரதேச செயலாளர் ஈடுபட்டுள்ள போதும் அவர்களின் கீழ் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைத் தேவையினை கருத்திற் கொள்ளாது ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டமை தொடர்பில் சங்கத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே இதனைக் கண்டித்தும் எதிர்காலத்தில் எரிபொருள் வழங்கலின் போது உரிய பொறிமுறையினைப் பின்பற்றி எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறு கோரியும் நாளை ஜூலை 4ஆம் திகதி முதல் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராகும் வரை தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் – என்றுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.