விமான சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து!
இலங்கைக்கான விமான சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பாரிய சேதம் ஏற்பட்டால் காப்புறுதியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையர் எவருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் விலையை குறைக்கலாம் என்று கூறுவது முட்டாள்தனமான கதை என்றும், புதிய முதலீட்டாளர்களை இவ்வாறு வரவிடாமல் செய்யும் முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் என்றும் கூறினார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை