இன்று விசேட டெங்கு ஒழிப்பு தினம்!!

 


விசேட டெங்கு ஒழிப்பு தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டில்  43,000 டெங்கு நோயாளர்கள் இதுவரையான காலப்பகுதியில்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.


இந்தநிலை தொடருமாயின் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.


இன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலை, உள்ளிட்ட கட்டடத் தொகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


டெங்கு நோய் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.