இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடந்த சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படை கைது செய்துள்ளனர்.அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்தொழிவ் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று காலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை