10 இலங்கையர்கள் வெளிநாடொன்றில் கைது!!

 


ஆகஸ்ட் 12 அன்று  அஸர்பஜான் நாட்டின் எல்லையில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைளின்போது இலங்கையர்கள் 10பேர் கைதுசெய்யப்பட்டனர்.இவர்கள் கடந்த ஜூலை 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சுற்றுலாப் பயணிகளாக நாட்டின் எல்லைக்கு அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளனர்.


இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் நாட்டின் எல்லைச் சேவை தெரிவித்துள்ளது.


பின்னர், அலிர்சா என்ற ஈரானிய குடிமகனுடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் செல்வதற்காக அஸர்பஜான் எல்லையை கடந்து துருக்கிக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளனர் எனவும் சட்டவிரோத இடம்பெயர்வுகளின் ஊடுருவலைக் கண்டறியும் வகையில் அவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.